Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த, இரண்டு கொரோனா நோயாளிகள், அடுத்தடுத்து தப்பி சென்றனர்.
சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா பாதிப்புடன், 400க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனிமை சூழல் காரணமாக, பலர், மன ரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால், சிகிச்சையில் இருந்து தப்பி செல்வது தொடர்ந்து வருகிறது. அதன்படி, இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த, 57 வயது நபர், நேற்று முன்தினம் (மே 28) இரவு தப்பி சென்றார்.
அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த, 63 வயது முதியவர் நேற்று (மே 29) தப்பி சென்றார். இதுவரை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து, ஐந்துக்கும் மேற்பட்டோர் தப்பி சென்றுள்ளனர். அதில், ஒரு சிலரை போலீசார் கண்டுபிடித்து, சிகிச்சை அளித்த நிலையில், மூன்று பேரை தேடி வருகின்றனர்.